ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பஞ்சப் மாநிலம் ஜலந்தரின் மாடல் டவுனில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் லக்கி ஒபரோய் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்கி தனது அன்றாட வழக்கப்படி இன்று காலை 8:15 மணிக்கு குருத்வாராவுக்குச் சென்றிருந்தார். அவர் குருத்வாராவுக்கு வெளியே இருந்தபோது, ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு […]
மணிப்பூரின் சுராசந்த்பூரில், நெம்சா கிப்கென் மற்றும் லோசி திக்கோ ஆகியோர் மாநிலத்தின் துணை முதல்வர்களாகப் பதவியேற்றதற்கு எதிராக பாதுகாப்புப் படையினருக்கும் கும்பலுக்கும் இடையே புதிய வன்முறை வெடித்தது. நேற்று, எம்.எல்.ஏ. நெம்சா கிப்கென் பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வராகப் பதவியேற்றதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துய்போங் பஜார் அருகே கூடி, டயர்கள் உட்பட குப்பைக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்குத் தீ வைத்தனர். ஆத்திரமடைந்த […]
இந்திய ரயில்வேயில் உள்ள RAC டிக்கெட் கட்டணங்கள் மற்றும் அதிவேக ரயில்களின் வகைப்பாடு குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதியை ஒதுக்காமல் பயணிகளிடம் முழு கட்டணத்தையும் வசூலிப்பது நியாயமற்றது என்று அது திட்டவட்டமாகக் கூறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது அறிக்கையில் இந்தக் குழு இந்த விஷயங்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே தற்போது பின்பற்றும் விதிமுறைகள் பயணிகளுக்குச் […]
உத்தரப்பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் மாமனாரையே மருமகள் கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ராஜ்பர் என்பவரின் கணவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் இல்லாத நேரத்தில் பிங்கிக்கும், ராம்மிலன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் ரகசிய தொடர்பை அறிந்த பிங்கியின் மாமனார் சுபச்சன், மருமகளின் […]
கேரள மாநிலம் கண்ணூர் அருகே திருமணமான பெண்ணை படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கண்ணூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்), கே.வி.சீமா என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சீமா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியானது. விசாரணையில், சீமா தனது […]
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஆசிரியையிடம் ஒருதலைக் காதல் கொண்டு, அவர் மீது நடத்தியுள்ள கொடூரமான தாக்குதல் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. மாணவன் – ஆசிரியை என்ற புனிதமான உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை கடந்த சில நாட்களாகவே அந்த மாணவனின் தொடர் தொல்லைக்கு உள்ளாகி வந்துள்ளார். மாணவனின் வரம்பு மீறிய […]
இந்தியாவின் பொது விநியோக திட்டத்தில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய முறையில் ரேஷன் கடைகள் வழியாக வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய நடைமுறையை கொண்டுவர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி மக்கள் பயனடைந்து வரும் நிலையில், […]
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.. இந்த பலி எண்ணிக்கை தற்போது 16-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. லும் பலர் சிக்கிக்கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். சுரங்கத்தில் இருந்து 16 உடல்கள் […]
பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 140 கோடி இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று இந்தியா மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சந்தை நிலவரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை பல்வகைப்படுத்தும் என்றும் […]

