மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். தலைமையின் அனுமதியை பெற்றே வரவேண்டும் என தவெகவினரிடம் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. கரூர் சம்பவத்தை […]
இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]
நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கும் விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் […]
“The AIADMK workers were at the meeting..” EPS said.. Did you notice this..?
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருபுறம் கூட்டணி வியூகம், மறுபுறம் தீவிர தேர்தல் பரப்புரை என களப்பணிகளில் இறங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே மட்டுமே போட்டி என்ற நிலை மாறி, விஜய்யும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளதால், இம்முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் […]
தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்டத்தில் முக்கிய அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளார். அவர் வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) இருக்கிறார். இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாகவும், 2001-இல் சுயேட்சையாகவும், 2006 மற்றும் […]
பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது […]
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட […]
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]

