தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ராகுல் காந்தி மனம் திறந்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்” என பாசத்துடன் உருகினார். அப்போது அவரிடம், “அப்படியெனில், இந்திரா காந்தியை போன்ற ஒரு […]

முன்னாள் முதல்வரின் சாலை பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் சாலை பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாயுடுவின் கான்வாய் நடக்கும் அப்பகுதியை கடந்து சென்றபோது கூட்ட நெரிசல் தொடங்கியது. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். “நெல்லூர் மாவட்டம் கண்டுகூரில் நேற்று தெலுங்கு தேசம் […]

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பும் இடம் பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த முறை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், […]

தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் ஆண் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘திராவிட அரசன்’ என்று பெயர் சூட்டினார். இது மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது.  சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற இந்திய வரலாற்றுச் சங்கத்தின் 81வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் […]

ஒரு வயதே ஆன நாய் குட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கயின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் ஆஷு மாரசிங். 51 வயதான ஆஷூ, அவரது காதலியின் செல்ல நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக […]

பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் காயமடைந்தார். அறிக்கைகளின்படி, அவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கர்நாடகாவின் மைசூரு அருகே அவரது மெர்சிடிஸ் பென்ஸ் கார் சாலையில் இருந்து டிவைடரில் மோதியது. பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவர்களுக்கு லேசான காயம் அடைந்து தற்போது பாதுகாப்பாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன. […]

சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்ட வந்தது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2500 ரூபாய் பணம், அதோடு பொங்கல் வைக்க தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டனர். ஆனால் இவை அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரையில் வழங்கப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை […]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் வருடம் தோறும் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அதனைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி கொண்டாடுவதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் இவற்றுடன் 2500 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது ஆகவே […]

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே அதிக நிர்வாகிகள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிறுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அனைத்தும் […]

இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882இல் எட்டயபுரத்தில் பிறந்த இவர், தமிழ், தமிழர் நலன், சாதிய மறுப்பு, பெண் விடுதலை, இந்திய விடுதலை உள்ளிட்ட பலவற்றிற்காக குரல் கொடுத்தவர். மகாகவி பாரதியாரின் மகள்வழிப் பேத்தியும், இசையாசிரியருமான லலிதா பாரதி அம்மையார், வயது மூப்பு […]