ஆவடியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் நாசர் படுத்துக்கொண்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராட்சத குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ராட்சத குழாயில் வால்வு உடைந்ததை உறுதி செய்ய தரையோடு தரையாக படுத்து ஆய்வு மேற்கொண்டார். பின்பு, அதிகாரிகளிடம் விரைவில் இதனை சரிசெய்யுமாறு உத்தரவிட்டார். இதற்கிடையே, […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் அலுவலகம் அளித்த விளக்கத்தில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கமான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தம்பி மல பில்லு இன்னும் வரல’ என கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கான ரசீது கேட்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியை […]
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி கட்சி வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி […]
பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகு வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜகவில் நீடிக்கும் வீடியோ, ஆடியோ கலாச்சாரத்தால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், வீடியோ, ஆடியோ பிரச்சனை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும், தமிழக பாஜகவில் நிலவும் […]
டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய ஒற்றுமை” பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தற்போது தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது. ஜனவரி 26 ஆம் […]
சில தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச்-ன் விலை ட்ரெண்ட் ஆனது, ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என கூறும் அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் கிடைத்தது என்று பல தரப்பினர் கேள்வி எழுப்பினர். குறிப்பாக திமுகவினர் இதை விடுவதாகவே தெரிவதில்லை, வார் ரூம் போட்டு பெரிய முதலாளிகளை மிரட்டி, அன்பளிப்பாக வாங்கிய வாட்ச்சுக்கு பில் எப்படி இருக்கும் என கேள்விகளை எழுப்பி […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு அப்பலதரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் ஒருவர் சீமானை “சார் நீங்களும் உங்க உறவினர் அருள்மொழிக்கு(சீமான் மனைவியின் உடன் பிறந்த அண்ணன்) கட்சியில் சீட்டு கொடுத்தாக ஒரு குற்றச்சாட்டு இருக்கே” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூற முடியாமல் திணறிய சீமான் “அவனுக்கு ஒரு பிரச்சனை […]
ராஜ்யசபா எம்.பி கர்ணேந்து பட்டாச்சார்ஜி காலமானார். மூத்த காங்கிரஸ் தலைவரும், சில்சார் தொகுதியில் இருந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ணேந்து பட்டாச்சார்ஜி, வயது தொடர்பான சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று புது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 84 வயதான அவருக்கு நந்தினி பட்டாச்சார்ஜி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த அரசியல்வாதியின் மறைவுக்கு முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். […]
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைகாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்து கொண்டுள்ளனர். ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் தைத்திருநாளுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய […]