‘அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன்’ என வி.கே.சசிகலா பேசியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோர்களுடன் வி.கேசசிகலா கிறிஸ்துமஸ் கொண்டாடிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”அதிமுகவினர் அனைவரையும் நான் ஒன்றிணைப்பேன். பழனிசாமி, பன்னீர்செல்வம் தான் தனித்தனியாக செயல்படுகின்றன. நான் அப்படியல்ல. பெங்களூரில் இருந்து வெளிவந்த போது கூறியதையே இப்போதும் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். ஒரு தாய் […]

பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் முக்தா திலக் உடல்நலக்குறைவால் காலமானார். புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  தற்போதைய திமுகவின் மக்களவை உறுப்பினராக உள்ள ஆ. ராசா கடந்த 2004 – 2007 வரையிலான காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமான முறையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக லஞ்சமாக பணம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் ஆ.ராசா பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 […]

தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை […]

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களை குழப்ப வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார். நாங்கள் தான் அதிமுக கட்சி; நாங்கள் எதற்காக தனிக்கட்சி துவங்க வேண்டும். ஓபிஎஸ் வேண்டும் என்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கலாம். நாம் ஒருவர் […]

அதிமுக கட்சியின் பெயர் அல்லது முகவரி அல்லது முத்திரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சனை காரணமாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக அந்தக் கட்சி தற்போது பிரிந்து கிடக்கிறது. இருதரப்பும் மாறி மாறி, நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர். மேலும், கட்சியை உரிமைக் கோரும் […]

ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ஒலிம்பியன்களுக்கு அவமரியாதை, மேடையில் இடம் கொடுக்காமல் அருகில் அமரவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக சாம்பியன் கோப்பை நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று, சென்னை வந்த உலகக் கோப்பை எழும்பூர் ராதாகிருஷ்ணன் […]

40 லட்சத்துக்கு ரஃபேல் எடிஷன் பெல் மற்றும் ராஸ் கைக்கடிகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி வாங்கினார் என்று திமுக சார்பில் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணாமலையின் சொந்த சேகரிப்பில் உள்ள இந்த கைக்கடிகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவிற்கு அண்ணாமலை கூறியதாவது நான் கட்டியிருக்கும் கடிகாரம் ரபேல் வடிவமைத்த விமானத்தின் பாகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது . இவற்றில் 500 கடிகாரங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றானது தன்னிடம் […]

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் காலமானார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார். மறைந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் துணைத் தலைவராக இருந்தவர். கருணாநிதி, முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் […]

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிறமாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2016 முதல் 2021 வரையிலான […]