அதிமுக நாடாளுமன்ற முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், மாரடைப்பால் காலமானார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (வயது 67). இவரது தந்தை தர்மர். தாயார் சின்னதாயம்மாள். டி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பணியாற்றி உள்ளார். சிவகாசி யூனியன் தலைவராக 1986ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும், 2011 முதல் 2014 வரை என 3 முறை இருந்துள்ளார். […]

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மற்றொரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதாவது, விரைவில் தொண்டர்களின் ஒப்புதலுடன் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை […]

பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இக்கூட்டத்தில் பேசிய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, ”ஒன்றிய, நகர கழக […]

குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். குஜராத் மாநில தலைநகரில் இன்று நடைபெறும் முதல்வர் பூபேந்திர படேலின் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து குறைந்தது 20 முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்திநகரின் புதிய செயலக கட்டிடத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் […]

நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.அதோடு தலைநகர் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து சாலையில் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தனர். அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுப்பட்டு வந்தனர்.இதே போல தமிழ்நாடு முழுவதும் இந்த புயலின் தாக்கம் காரணமாக, பல்வேறு சேதங்கள் […]

இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தேர்வு செய்தது. துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. இமாச்சலப் பிரதேச முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் பிரதீபா வீர்பத்ர சிங்குக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அவரை விட சுகு தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் […]

மாண்டஸ் புயலானது கரையை கடக்கும்போது, பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘மாண்டஸ் புயல்’ எச்சரிக்கையை அடுத்து பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் […]

ஒரு அரசியல் கட்சியில் ஒருவர் இணைந்து பொதுநலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு முதலில் தேவைப்படுவது பணம் மட்டும்தான்.என்னதான் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தாலும் கூட பணம் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். இதுதான் காலகாலமாக நடைபெற்று வருகிறது. சாதாரண தொண்டர்களாக இருக்கின்ற யாரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதில்லை. அதேபோல கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் […]

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 36 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் செல்வதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் ராஜாங்க ரீதியிலான பயணங்கள் மூலமாக இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து இருப்பதாகவும் முக்கிய அலுவல் பயணமாகவே பிரதமர் சென்று வருவதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், பிரதமர் […]

அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தென்காசிக்கு ரயிலில் சென்ற நிலையில், அவர் பயணித்த ரயில் பெட்டியின் வசதிகள் மற்றும் கட்டணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெற்றது. தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் […]