இமாச்சல் பிரதேசத்தில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது, 68 தொகுதிகளில் 40 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் -40 , பாஜக-25 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இமாச்சலில் ஹமிர்பூர் மாவட்டம் போரஞ்ச் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் குமார் மொத்தம் 24,779 வாக்குகளை பெற்றிருந்தார், அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அனில் திமான் 247,19 […]

உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் […]

வரும் 12ஆம் தேதி குஜராத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்க இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காலை […]

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7-வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது. அந்த வகையில், ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா […]

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாஜக மீண்டும் குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது, மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான போக்கைக் குறைக்கும் […]

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 -ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் […]

சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தான் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏனென்றால் 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஆனால் தற்போது சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளது, இதனால் இந்தியாவில் இன்று பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சின. தொடர்ந்து பல நாட்களாக […]

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அப்போது ஓபிஎஸ்யின் வலதுகரமாக இருந்த கோவை செல்வராஜ் எடப்பாடி அணியினருக்கு பதிலடி கொடுத்து கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட […]

திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மகள் பாரதி (55). இவரது கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளுடன் காட்டிபாடியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார் […]

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது என்பதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மலை மேல் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயில் பல ஆண்டுகளாக பாழடைந்து பராமரிப்பின்றி இருந்து வந்தது. கடந்த 2002இல் ஓபிஎஸ் அரசியல் வளர்ச்சிக்குப்பின் அவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் முயற்சியால் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு […]