அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்ற இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒன்று சேருவோம். ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் ஒன்று சேருவோம். ஒன்றிணைய எடப்பாடி ஒத்துழைக்கவில்லை என்றால், அவர் தனித்து விடப்படுவார். அது […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்த நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராமை கடந்த சில நாட்களுக்கு முன் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார் காயத்ரி ரகுராம், மேலும் தன்னுடைய தலைவர் மோடி தான் என்றும், அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்து […]
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இனி […]
திமுக அரசின் மிக முக்கிய வாக்குறுதியான உரிமைத் தொகை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் […]
மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – 2022 விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுகளை வழங்கினார். இதையடுத்து, பேசிய அவர், ”அனைத்து நாட்களுமே மாற்றுத் திறனாளிகளுக்கு நன்மை செய்கிறோம். அனைவரையும் […]
”ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் விஜய் கண்டிப்பாக வருவார்” என பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. ஆனால், அவரது தந்தை மட்டும் அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என ரசிகர்களுக்கு தகவல் கொடுப்பார். ரஜினி, கமல் ஆகியோரின் […]
ஊருக்குள் பிரபலமாக தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி, போலீசில் சிக்கிய இந்து முன்னணி இயக்க நிர்வாகி சக்கரபாணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தனது வீட்டில் தூங்கிக் […]
தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றதாகவும், தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை எனவும் முதல்வர் முக.ஸ்டாலின் அரசு விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆனால், கடந்த […]
தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை என் கட்சியில், என் சின்னத்தில் நிற்க வைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது வீட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சீமான், “இது ஒரு இயல்பான சந்திப்பு. அண்ணன் […]