ஆரூர்தாஸ் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சென்னை தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். ஆரூர்தாஸ் உடல் இன்று மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் […]

ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் […]

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான அம்சம் எதுவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்புதான். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக […]

குஜராத் இன்று கலவரம் இல்லாத ஒரு மாநிலமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி தான் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பா.ஜ.க.விற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், குஜராத்தில் இன்று […]

முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது அதிமுக பொருளாளராகவும் உள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை மற்கொண்டு வருகின்றனர். எனவே தொண்டர்கள் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். இதனால் […]

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் மாவட்ட திமுகவினர் பா.ஜ.க.வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் லத்தேரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிகாரப்பூர்வமாக இது தேர்தல் சம்மந்தப்பட்ட கூட்டம இல்லை என்றாலும் கூட இதில் சில விஷயங்கள் தேர்தல் பற்றி பேசப்பட்டது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் […]

தாவல் திலகம் குஷ்பு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முரசொலி நாளிதழ் நடிகை குஷ்புவுக்கு பட்டப்பெயர் வைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது பற்றி முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பல்வேறு கட்சித்தாவலில் தொடர்கின்றார். தேவையில்லாமல் முதல்வர் பற்றி பேசி வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்திற்குள் […]

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை என பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு பக்கம் நாம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள் தொடர்பாக பேசி வருகிறோம், மறுபக்கம் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் இந்திய கலாச்சார பரப்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார். பொழுதுபோக்குக்கு […]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது தேர்தல் பிரசார மேடையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த படுகலை வழக்கில் 26 […]

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன் கூட்டுறவு என்றாலே கடன் தள்ளுபடி செய்வார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவது கடன் வாங்கினா ஒழுங்கா கட்ட வேண்டும் என கூறியது சர்ச்சையாகி உள்ளது. காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் ,ஜெகத் ரட்சகன் […]