தெலங்கானாவில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதியின் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தெலங்கானாவில் ஆட்சி அமைத்ததில் இருந்தே எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக சந்திரசேகர் […]

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு தரவிருந்த வருகை தள்ளி போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களின் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜரான […]

சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மரியாதை நிமித்தமாகவே ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என பேட்டி அளித்துள்ளார். சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வந்தார். அவர் ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அங்கு அவரை சந்தித்தார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், ’’ மேற்கு […]

ஒரு நாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிப்பதாகவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி மக்கள் நீதிமய்யம் கட்சி அரசிடம் வலியுறுத்தி உள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்துவாங்குகின்றது. 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்படும் நிலையில் ஒரு நாள் மழைக்கே இங்கு சென்னை தத்தளிக்கின்றது. இது தொடர்பாக மக்கள் நீதி […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021இல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது, பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. […]

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. ​இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் […]

நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஒருவர் குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு சார்பில் ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ’கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் ’கர்நாடக ரத்னா’ விருதை வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் […]

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01‌.07.2022 முதல் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்காததோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியைக்கூட வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் […]

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னையில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மகளிர் நிவாகிகள் குஷ்பூ, கௌதமி ஆகியோர் குறித்து திமுக நிர்வாகி சாதிக் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. […]

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி ஒன்று திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கோயம்புத்தூரில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த அரசியல் ஆதாயம் பெறுகின்ற நோக்கில் ஆளுநரும் பாஜகவும் செயல்பட்டு வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிரான நபராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அவர் ஆளுநர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு […]