தமிழக அரசு உத்தரவு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியாகியன. அதில் 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின் படி பாராசிட்டமால் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்ககோரி அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். அப்போது, பேரவைக்கு முரண்பாடாக செயல்படுவதாக கூறி அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர், அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் […]
விரைவில் நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் பக்கம் மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இருமாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை என்று சொல்லுமளவிற்கு 27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளது. இருப்பினும் இங்கு மிகப்பெரிய வெற்றியை […]
கடந்த 2016 இல் டிசம்பர் மாதத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இன்று அந்த விசாரணை குழு 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதில், கே.எஸ் சிவக்குமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தி, கட்டண நிர்ணய குழு ஆணை பிறப்பித்திருக்கிறது. தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.29.40 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அநீதியானது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 […]
மேற்கு வங்க மாநிலத்தின் விளம்பர தூதராக ஷாருகானுக்கு பதிலாக சவ்ரவ் கங்குலியை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் சுவெண்டு அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவாக சுவெண்டு அதிகாரி பொறுப்பில் உள்ளார். அவர் கூறுகையில் , பிரதமர்மோடி இது போன்ற விஷயங்களில் விலகியே உள்ளார். மம்தா பானர்ஜி சவுரவ் கங்குலியின் குத்தகையை நீட்டிக்க […]
அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்து பேசிய அவர், ”மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும். சுய உதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக […]
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சக்கரைக்கான பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்கப்பட்டது. தட்டாஞ்சாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடியை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சர்க்கரை, மைதா, ரவா, சமையல் […]
அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில அரசு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய 3 பகுதிகளிலும் சம வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக 3 தலைநகர் என்ற கொள்கையுடன் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் அறிவித்தது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி […]
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஜோடோ யாத்திரை பயணத்தில் பாதுகாப்பாற்ற முறையில் ஜோடோ யாத்திரை சென்றதால் 4 பேரை மின்சாரம் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியினர் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தலைமை ஏற்று ராகுல்காந்தி நடத்தி வருகின்றார். இன்று ஜோடோ யாத்திரை தொடங்கிய போது சங்கனகல்லு என்ற கிராமத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தொண்டர்கள் […]