முன்னாள் தமிழக பாஜ  தலைவரும் மேற்கு வங்க ஆளுநருமான  இல.கணேசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் பா.ஜ. தலைவரான இலகணேசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கம் மற்றும்மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநர் இலகணேசன் சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து […]

இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது’ என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய […]

முன்னாள் எம்எல்ஏ புனலூர் மது உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். கேரளா மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் தலைவருமான புனலூர் மது உடல் குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. இதயம் தொடர்பான நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். புனலூர் மது முன்பு KSU-யின் மாநிலத் தலைவர், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர், KPCC உறுப்பினர் மற்றும் […]

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்; ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம்… மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ், பிருத்விராஜ், ஸதாவீதுராஜா பிரவீன்ராஜ் என்ற வயது 19 இளைஞர், ஈசாக் மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய […]

மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீபாவளி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கடந்த ஆட்சி காலத்திலேயே மத்திய அரசு தொடங்கியது. இதனை கண்டித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை […]

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்‌ தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 60ஆயிரத்திற்கும் […]

திமுக பொதுக்குழு கூட்டம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், தலைவர் பதவிக்கு முக.ஸ்டாலின் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திராவிட அரசியல் பேரியக்கமான திமுக 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட […]

தேவர் ஜெயந்தியன்று தங்கக்கவசம் அணிவிக்கும் உரிமைக்கு எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி உரிமை கோரி வருவதால், வங்கி நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கியிருந்தார். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் அதிமுக சார்பில் அந்த தங்கக்கவசம் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு […]

புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. மின்துறை தனியார் மையம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார […]

அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என மத்திய தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 12-வது பள்ளி உளவியல் சர்வதேச மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”கொரோனா பெருந்தொற்று நேரத்தில், தொலைநோக்கு பார்வையுடன் பல முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார். அதனை திடமாக செயல்படுத்தியதால், கொரோனா தடுப்பூசியில் இன்று தன்னிறைவு பெற்றுள்ளோம். 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகை திரும்பிப் […]