சீனாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியான ஃபுஸெங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது. அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 மற்றும் ஜூலை 11 ஆம்தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்ற […]
சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காலை தலைமைச் […]
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் தெரிந்துவிடும். காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்புக்கு 2000ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். நீண்ட காலமாக சோனியாகாந்தி தலைவராக இருநு்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ராகுல்காந்தி தலைவராக இருந்தார். 2019ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் […]
நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என […]
முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். கடந்த 11ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம், ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து […]
தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற […]
கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் […]
ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் […]
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், அதிக அளவு குடிபோதையில் தள்ளாடியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், சமீபத்தில் அம்மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றிருந்தார். அவர் அங்கிருந்து டெல்லிக்கு தாமதமாக திரும்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் […]