ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தி.மு.க.வில் இணைந்த நிலையில், வைத்திலிங்கமும் அதிமுக அல்லது தி.மு.க.வில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வந்தன. […]

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால […]

திருவாரூரில் ரூ.50 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு‌. முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி […]

விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் வரும் நவம்பர் 19-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மோடி வரும் […]

திமுக அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை நேரடியாக (ஒன் டு ஒன்) சந்திக்கும் ‘உடன்பிறப்பே வா’ என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 81 தொகுதிகளின் நிர்வாகிகளை ஸ்டாலின் […]

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை […]