நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் […]

என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும். […]

அண்ணாமலையாவது பரவாயில்ல.. எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் […]

ராமதாஸ் – அன்புமணி மோதலால் மன உளைச்சலில் இருப்பதாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ள நிலையில், இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமே அவர் தான் என பாமக பொருளாளர் திலகபாமா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ராமதாஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த பிரச்சனையை மேலும், அதிகப்படுத்தவே செய்தது. தனது மகன் அன்புமணி மீதான குற்றச்சாட்டை நான்கு சுவற்றுக்குள் வைத்து பேசியிருக்கலாம் என்றும், பொதுவெளியில் வைத்து அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும், பாமகவினரே கூறி வருகின்றனர். இதற்கிடையே, […]

பாரபட்சமின்றி தமிழர்களின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்தது நாயகன் படத்தில் தான். இந்நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் இலக்குவன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதியான நாளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மே 23ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் […]

தமிழ்நாட்டில் இந்தாண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தண்டு கல்வி விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நேற்று (மே 30) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், […]

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என்னுடைய தவறு என்றும் அவருக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். அதேபோல், பாமக-வில் முகுந்தனை நியமித்தபோது, தாயார் மீது அன்புமணி பாட்டில் வீசித் தாக்கியதாகவும், பாஜகவுடனான கூட்டணிக்காக […]

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக […]