தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும், கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கவுமே முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைனில் மதுபானங்களை நேரடியாக வாங்குவதற்குச் சாத்தியமில்லை; மாறாக, இணையவழியில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். பொதுமக்கள் வழக்கம் […]

விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]

தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய காலக்கட்டத்தில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக சார்பில் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ரூ.4,000 உதவித்தொகை போன்ற பிரதான வாக்குறுதிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், “பெரும்பாலான வாக்குறுதிகளை நமது அரசு […]

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு […]

தமிழக அரசின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து, தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், மாநிலத்தின் வரி வருவாய் அதிகரித்திருந்தாலும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நிதி மேலாண்மை பற்றிய வெள்ளை அறிக்கையிலேயே, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் அளவு இருமடங்காக […]

முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை பனையூரில் நடந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இன்னும் ஆறு மாத காலத்திற்குப் பிறகு திமுகவினர் வீட்டை விட்டு […]

முதல்வர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணையை முடித்த காவல்துறையினர், அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக மகளிரணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் உதயநிதியை […]

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் வைத்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் உதயநிதியை அவரது இல்லத்திலேயே வைத்துப் பிடித்த காவல்துறையினர், உடனடியாக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டனர். […]

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, பிணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மத்திய சிறை என்பது தி.மு.க.வினருக்கு முக்தி தரும் இடம். சிறைச்சாலை என்பது எங்களுக்கு […]

காவிரி நீர் உரிமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாமலும், மேகதாது அணை திட்டத்தை தடுக்க இயலாமலும் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கொந்தளிப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது உரையாற்றிய, […]