சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் […]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 100), மீண்டும் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் தான் அவர் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், நல்லகண்ணு முதலில் சென்னையில் உள்ள […]

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை, தேர்தல் ஆணையம் இம்மாதம் 6-ம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாலையின் உயரத்திற்கு ஏற்ப தரைதளம் அமைக்கப்படுவதுடன் […]