சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது […]

கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய […]

பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்க வேண்டும். எந்த விசாரணையும் இன்றி சிலரை சேர்க்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு என […]

தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடியை 36 லட்ச வாக்காளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படி வாக்காளர் பட்டியலில் சரி பார்க்க முடியும்..? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் […]

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், உள்நாட்டு அரசு நிறுவனங்களை தாங்கிப் பிடிக்கும் வகையிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இனி அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசு நிகழ்ச்சிகளில் கர்நாடக பால் கூட்டமைப்பின் ‘நந்தினி’ தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மத்திய, […]

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் மேற்கொள்ளவிருக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், புதிதாக அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க மாட்டோம் என அறிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை […]

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம். நடைபெற உள்ளது. மத சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வருகிற 4ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர […]