அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்ற செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த […]

அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி […]

தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.. மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. […]

மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நம் சொந்தங்களை இழந்ததால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்.. வேதனையில் அமைதி காத்த போது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது.. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அவற்றை துடைத்தெறியப் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக கொடுக்கப்பட்ட உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. […]

கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த  தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. […]

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறவுள்ள நிலையில், நிகழ்விடத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்க்கு காவல்துறையின் திடீர் நடவடிக்கையால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்குக் காரில் வருகை தந்த விஜய், அங்கு கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளைப் போலீசார் அகற்றிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைப் பார்த்த […]

சில துரோகிகளும், தீய சக்திகளும் என்னையும் எனது தந்தை ராமதாஸையும் பிரித்துவிட்டார்கள். ராமதாஸை சுற்றியுள்ள சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் அவரைவிட்டு விலகும் வரை அவருடன் இணையமாட்டேன் என தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் அன்புமணி அறிவிப்பு. தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான பா.ம.க.வில் தற்போது அப்பா ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் கட்சிக்கு […]