வன்முறையில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறையில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசி அவர், இறந்தவர்கள் எந்தக் கட்சியின் அடிப்படையில் இருந்தாலும் அரசாங்கம் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். கடந்த 2000ஆம் ஆண்டு வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், உலகளவில் நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் […]
ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், […]
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் […]
நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறைச்செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது, காவல்துறையினரின் […]
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனை சுமார் 25 விழுக்காடு குறைந்தது. இதேபோல கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பாக்கெட் மதுவிற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”500 டாஸ்மாக் கடைகள் […]
பாஜக கொடுப்பதாக சொன்ன ரூ.15 லட்சம் எங்கே என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று திமுக சொன்ன மாதம் 1,000 ரூபாய், உரிமைத் தொகை கொடுக்குறாங்க… நீங்க சொன்ன 15 லட்சம் ரூபாய் எப்போ கொடுக்க போறீங்க? என்று பாஜகவிடம், திமுக தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி 2014 ஆம் தேர்தலின் போது, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகுதூர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் […]
டெல்லியில் ஜூலை 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் உள்ளது, தற்பொழுது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முக்கிய கூட்டம் ஒன்றை […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதுதொடர்பாக, […]