ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக் கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட […]

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், […]

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் நான்கு பேரை கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க […]

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை […]

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூ சுற்றி வரும் […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி […]

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செல்வதை அவர் விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒரு அரசியல் என்பது 24 மணி நேரம் களத்தில் இருக்க வேண்டும்.. அது முழு நேர வேலை.. தவெக ஒரு மாற்றம் தரக்கூடிய கட்சி என்று சொல்கின்றனர்.. எனவே 24 மணி நேரம் அந்த கட்சி களத்தில் இருக்க […]

ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]