கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகுதூர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் […]

டெல்லியில்‌ ஜூலை 18ம்‌ தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ பங்கேற்க அதிமுக பொதுச்‌ செயலாளர்‌ எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் உள்ளது, தற்பொழுது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முக்கிய கூட்டம் ஒன்றை […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதுதொடர்பாக, […]

செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்றும் , நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற […]

நடிகர் விஜய் ஒரு பக்கம் தன்னுடைய திரையுலகில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொரு புறம் அரசியலில் கால் பாதிக்கும் நேரத்தையும், எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் அடிக்கடி அரசியல் நோக்கத்துடன் பல்வேறு செயல்களை தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தினரை வைத்து செய்து வருகிறார். ஏற்கனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல ஆண்டுகளாகவே உணவு, உடை போன்ற உதவிகளை செய்து வரும் விஜய் ரசிகர்கள், சமீபத்தில் விஜய்யின் அறிவுறுத்தல் […]

காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தென்மேற்கு பருவமழை எதிரொளியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு வர வேண்டிய சரக்கு லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசியப் […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இருவரும், ஒரே நேரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் இன்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கோபாலபுரம் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே உறவினர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தயாளு அம்மாளின் மகன் முக.தமிழரசன், பேரன் அருள்நிதி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் […]

எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடு என மாஸ் காட்டி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே சசிகலாவும், அதிமுகவை ஒன்றிணைப்பதாக கூறி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தனது சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்க உள்ளார். இது தொடர்பான […]

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது, சீமான் தமிழ் தேசியக் கொள்கையை விடுத்தால் பாஜக கூட்டணிக்கு நாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், எச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுதான் எனது பதில், நட்பு என்பது வேறு அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அவர் […]

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்று 2021 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் […]