ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில், திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடி இருந்தார். அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணத்தையும் […]

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசின்‌ நிறுவனமான ஆவின்‌ நிறுவனத்திலேயே குழந்தை தொழிலாளர்கள்‌ பணி அமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள்‌ வெளிவந்துள்ளன. தி.மு.க. அரசின்‌ இந்தச்‌ செயல்‌ வேலியே பயிரை மேய்வதுபோல்‌ உள்ளது. அரசின்‌ இந்த சட்டவிரோதமான செயல்‌ கடும்‌ கண்டனத்திற்குரியது. தனியார்‌ நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசே […]

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ 1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஸ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார். இதே போல் கலைஞர் […]

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் ஆலம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கருணாநிதி மகன் என்ற பின்புலத்துடன்தான் ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆனால், எடப்பாடியார் அப்படி அல்ல, 50 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, கழகப் பொதுச்செயலாளராகி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தமிழகத்துக்கு […]

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்காக 10,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. சரியாக 8 மாதங்களுக்குப் பிறகு 2023 மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. […]

இன்று தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட இருவரும் ஒரே மேடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன் சிலரின் சுயநலம் பேராசை உள்ளிட்டவை காரணமாக 6 வருடங்களுக்கு முன்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து மிக கனத்த இதயத்துடன் அம்மா மக்கள் […]

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் ‌‌. ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களும் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி […]

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே 2,000 ரூபாய் நோட்டால் சமீபத்தில் வார்த்தை போர் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்தியதை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதனை வங்கியில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மத்திய, மாநில […]

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராஜன்செல்லப்பா…. தமிழகத்தில் இரண்டு வருட திமுக ஆட்சியில் இதுவரை […]

ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் நம் மீதே பழி சுமத்துவார்கள் எனவும் மோடி பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டுகிறார் என்றும் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  இந்திய வம்சாவளி மக்களிடம் பேசினார். முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு […]