மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என […]

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் இருக்கின்ற பகநாகா என்ற பகுதியில் நேற்று இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவம் காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்து இருக்கிறது. 900 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணி அளவில் ஒரிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழுவுடன் காணொளி மூலமாக […]

2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். ”தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்பின் […]

புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடைபெற இருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் அறிக்கை. உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு ஜல்லிகட்டு தீர்ப்பை பெற்று தந்தமைக்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு.ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஜீன் 5 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற இருந்து பாராட்டு விழா ஒத்திவைப்பு. முதல்வருக்க்கான பாராட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கபடும் என தகவல்.

ஒடிசாவின் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்து இருக்கின்ற நிலையில், இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து காரணமாக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உதவியை விரைந்து செய்திட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஒரிசாவிற்கு […]

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு துணை ஆணிற்கும் ஏன உதயநிதி தெரிவித்துள்ளார்.இன்றுகாலை 2 ஐ ஏ எஸ் அதிகாரிகளுடன் உதயநிதி ஒடிசாவுக்கு சென்றுள்ளார் அங்கே விபத்தில் அசிக்கய்ய தமிழர்களின் நிலைப்பற்றி கேட்டறிவார் என தகவல் அதேபோல விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தனி சிறப்பு ரயில் தமிழத்திலிருந்து புறப்பட்டுள்ளது.இதுகுறித்து பிரதமர் அவரரை ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உள்ளனர். கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. விபத்தில் சிக்கியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என […]

ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என […]

ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்று கோவலத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அண்ணாமலை, இலக்கு 2024: தெற்கில் வெல்லப்போவது யார்? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் பேசினார். அப்போது “ராகுல் காந்திக்கு வேலையில்லை என்பதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோருமே வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கூறுவது […]

முதல்வர், கோட் சூட் அணிந்து சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா சென்றதால் அரசு பணம் வீணாகியதை தவிர, தமிழகத்திற்கு முதலீடு ஏதும் வந்ததாக தெரியவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதில் சொல்லாத முதல்வர், யாருடைய கேள்விக்கு பதில் சொல்வார் என்று தெரியவில்லை. மேகதாது அணை பிரச்சனையில் முதல்வர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்தால் எப்படி […]