விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கடவுளுக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைத்தால், இந்த பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை […]

என் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார் என மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 17 வயது சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை […]

டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சந்தித்து பேச இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்திற்கு எதிராக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தலைநகர் டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் […]

ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா?5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர்தேர்வு அறிவிக்கை வெளியிடாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் […]

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை […]

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 […]

மகாராஷ்டிரா சந்திரப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்பி பாலுபாவ் தனோர்கர் காலமானார். மகாராஷ்டிராவில் இருந்து காங்கிரஸின் ஒரே மக்களவை எம்பியான பாலுபாவ் தனோர்கர் உடல்நல குறைவால் தனது 48 வயதில் இன்று அதிகாலை காலமானார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சைக்காக அவர் கடந்த வாரம் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் […]

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதிலும் குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில், தொடர்ச்சியாக தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களை பாராட்டி வருகிறார். அண்மையில் பாப்புவா நியூ கினியா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்று அந்த நாட்டின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பை […]

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக திமுக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான […]