கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பயணிக்க ஏதுவாக ரூ.1 கோடி மதிப்புள்ள காரை அம்மாநில அரசு வாங்கியுள்ளது. கர்நாடகா முதல்வராக சித்தராமையா 2013 – 2018 ஆம் ஆண்டு வரை இருந்தார். அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யாரென்றே சொல்லாமல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் களம் கண்டது. அதில் 135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பாஜக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க […]

கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் 22-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 23 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிவாரா திடலில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் முதலில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமைய்யா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில துணை முதலமைச்சராக […]

கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு […]

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30, வரை, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் […]

விழுப்புரம் மாவட்டம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இந்த கோயிலுக்குள் சென்று வழிபடுவது தொடர்பாக இரு சமூக மக்களிடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. அப்போது வழிபட கோயிலுக்குள் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. […]

விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரூபாய் 10 லட்சம் நிதியுதவி விஷச் […]

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் […]

வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா வியாழக்கிழமை மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பை விடுத்ததாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ கட்சியின் உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌. திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ நாளை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும் என தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌. […]