விழுப்புரம் மாவட்டம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இந்த கோயிலுக்குள் சென்று வழிபடுவது தொடர்பாக இரு சமூக மக்களிடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. அப்போது வழிபட கோயிலுக்குள் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. […]

விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரூபாய் 10 லட்சம் நிதியுதவி விஷச் […]

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் […]

வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா வியாழக்கிழமை மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பை விடுத்ததாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ கட்சியின் உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌. திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ நாளை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும் என தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌. […]

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் சித்தராமைய்யா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே சி வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக பேசியதாவது கட்சியின் சார்பாக துணை முதலமைச்சராக சிவகுமார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி பிரச்சனை நடந்த ஒரு வார காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக முதலமைச்சர் பதவி […]

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணம் இல்லாத 10581 […]

கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி விரிவாக விளக்கம் கேட்டுள்ளார். விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்‌. இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை […]

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் கள்ளச்சாராயத்தை குறித்த பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசும், காவல்துறையும் முடுக்கிவிட்டு இருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கை காவல்துறை தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கள்ளச்சாராயம் மற்றும் […]

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38% உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலித்து, இந்த உயர்வினை நடப்பாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 38% […]