fbpx

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று தமிழக அரசு விளக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துகளை கூறியிருப்பதாகவும், அவை குறித்த விளக்கங்களைக் …

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை …

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், ரயில்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை? இழப்பு ஏற்பட்ட ரயில்வே சொத்தின் …

உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜிஎஸ்டி-யின் 47-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அரசின் நிதி அமைச்சரும் கலந்துகொண்டார். அதிமுக ஆட்சியின்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரசு சார்பாக ஜெயக்குமார் கலந்துகொண்டார். …

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமனத்தில் சாதி அரசியல் இல்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”கடந்த அதிமுக ஆட்சியின்போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், அவரது ஆட்சியில் மின் கட்டண …

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த ஜுலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக …

மிழ்நாடு அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த …

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து எந்த பயனுமில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் ஜாமீனில் இன்று வெளியே வந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியினருடன் …

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோரிடம் விசாரிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய …

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை பாஜக தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தார். …