அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசிதழில் வெளியிடப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு […]

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழக அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நேற்று, அமைச்சர்கள், தலைமைச் […]

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக அன்பரசன் என்பவரை வேட்பாளராக அறிவித்து இருந்தது. அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது. பாஜக மேலிட தலைவர்கள் தொலைபேசி மூலமாக விடுத்த கோரிக்கையை […]

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. […]

தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்தில் 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தான் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு இன்னும் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், […]

தமிழகத்திற்கு 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார். ஆகவே இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தகவல் வந்ததை தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக […]

கடந்த 14ஆம் தேதி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அந்த பட்டியலில் திமுகவினரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார் அண்ணாமலை. அதனுடைய இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில் தங்களுடைய நிறுவனத்தின் நற்பெயருக்கு […]

12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், அதை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை […]

கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்து கொண்டிருக்கிறது. தொங்கு சட்டசபை அமைந்தால் நிச்சயம் ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராகவே மாறும். இதனால் ஜேடிஎஸ் மீதான கவனம் அதிகரிக்கவே […]

சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானார் அப்படி பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து தாய் கழகத்தில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், திருச்சி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளரான மண்டல பொறுப்பாளருமான ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கட்சியில் இருந்து விலகி […]