தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் […]

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் உள்ளூர் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் […]

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]

தேமுதிக-வின் கூட்டணி குறித்த இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் அக்கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் கூட்டணி முடிவு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்து சாடியுள்ள ப்ளூ சட்டை மாறன், “உங்களுக்கு என ஒரு கொள்கை இருந்தால் இந்நேரம் சரியான கூட்டணியை தேர்வு செய்திருப்பீர்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு […]

தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள […]

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி பல கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொண்டார். ஆளும் திமுக அரசாங்கத்தை எதிர்த்து களமிறங்கும் நிலையில், இந்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. பல வருட போட்டிக்குப் பிறகு மாநில அரசியலில் ஒரு மாற்றத்தைக் குறிக்கும் வகையில், அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் அமமுக தலைவர் டிடிவி […]

விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் […]

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது தனது வரலாற்றிலேயே சந்தித்திராத ஒரு இக்கட்டான உட்கட்சிப் பூசலில் சிக்கியுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் மற்றும் அடையாள சின்னமான ‘மாம்பழம்’ யாருக்குச் சொந்தம் என்ற சட்டப் போராட்டம், டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் […]

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திமுக அரசு தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு இந்த திட்டம் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது மாதம் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]