தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார்.. மேலும் “ இன்று மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்கு, ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்வதற்கு பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி மதுரைக்கு வருகிறார்.. இதற்கு முன்பு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்தது.. இப்போது மதுரையில் […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் […]

கரூர் மாவட்ட அரசியல் களம் எப்போதும் அனல் பறக்கும் ஒரு போர்க்களமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நிலவும் அரசியல் யுத்தம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது கோட்டையை தக்கவைக்க செந்தில் பாலாஜியும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க விஜயபாஸ்கரும் வகுக்கும் வியூகங்களால் கரூரில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த […]

சமீபத்தில் தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் “ கருத்துக் கணிப்பு என்று சிலர் எடுக்கின்றனர்.. சிலர் நியாயமாக எடுக்கின்றனர்.. சிலர் கடுப்பில் கருத்துக் கணிப்பில் எடுக்கின்றனர்.. ஒவ்வொரு ஊர் ஊராக, தெருத் தெருவக வீடு வீடாக சென்று கருத்துக்கணிப்பை எடுத்துப் பாருங்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றி கழகம் தான் இருப்பதை பார்ப்பீர்கள்.. நம்ம சி.எம். சார் ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவி வந்த கசப்புணர்வை நீக்கும் வகையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகளை அமெரிக்கா கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், தனது ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tax) கொள்கையின் மூலம் உலக நாடுகளை […]

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய திமுக அரசின் இறுதிக்கட்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விரைவில் தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ‘இடைக்கால பட்ஜெட்’-டிற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களுக்கான […]

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக – பாஜக இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி முன்வைத்த விமர்சனத்திற்கு, தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டு என்ன..? மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி களம் இறங்கியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இதுதொடர்பான சந்திப்பு நடைபெற்றது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]