இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று பலர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்தில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டதாகவும் அவர்கள் வாழும் கிரகத்தின் அளவு யுரேனஸைப் போல பெரியதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது‌. ஆனால் […]

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச தினம் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு […]

இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கும் கௌதம் அதானி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு உலகளவில் குறிப்பாக பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். இன்று 61 வயது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் கௌதம் அதானி 2 முறை செத்து பிழைத்த கதையைக் ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் பேசிய போது அவருடைய பர்சனல் வாழ்க்கை […]

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்த வெற்றி, இந்திய வீரர்களின் குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத […]

மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம். தமிழ் திரையுலகில் கடந்த 1950களில் இசை சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த இரட்டையர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. சிவாஜி கணேசன் நடித்த 2வது படமான ‘பணம்’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த இரட்டையர்கள் 13 வருடங்களில் சுமார் 100 படங்களுக்கும் மேல் இசையமைத்தனர். பின்னர் விஸ்வநாதனிடம் இருந்து ராமமூர்த்தி பிரிந்த பின்னர் […]

காலத்தால் அழியாத காவியங்களைத் தன் பாடல் வரிகளில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று. சொந்த வாழ்க்கையை அவர் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டவர்கள் யாருமில்லை – ‌அவரது பெயர் முத்தையா 1927-ஆம் ஆண்டு ஜுன் 24ந் தேதி, 8 வது பிள்ளையாக பிறந்து தத்து பிள்ளையாக வளர்ந்து, தமிழர் நெஞ்சங்களில் தனது பாடல் வழி நீக்கமற நிறைந்த கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. […]

இன்றைய இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வங்காளப் பகுதியான பிளாசி என்ற இடத்தில் 1757 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு தான் பிளாசி போர். ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளுக்கும், வங்காள நவாப் சிராஜ் உத்-தௌலாவின் ராணுவத்துக்கும் இடையே நடந்த ஒரு தீவிரமான போர் இது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவில் […]

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளன. பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இதோ! நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் […]

யோகா என்பது உடலையும் மனதையும், எண்ணத்தாலும், செயலாலும் ஒருங்கிணைக்கும் கருவி. இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட யோகா தினம் பற்றிய சிறப்பு தொகுப்பை இதில் பார்க்கலாம். யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம். ஆண்டு தோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் […]

தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” எனும் வள்ளுவர் வாய்மொழி நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாள் வாழ்த்துக்கள். உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி தன் மக்களது வாழ்வின் இன்பமே எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரியவர்கள் தந்தைகள். எந்தவொரு குழந்தையும் தங்கள் வாழ்க்கையில் […]