உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பால், டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் […]

ஒன்றைய சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை இன்டர்நெட்டிலும் இன்டர்நெட்டின் வேகம் குறைவாகவே இருக்கிறது. உங்களுடைய டேட்டா பேக் மிகவும் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்கினாலும், உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்ட டேட்டாக்களின் காரணமாக உங்களுடைய இன்டர்நெட் வேகம் கணிசமாகக் குறைகிறது. அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, […]

கூகுள் குரோம் பிரவுசர் பயனர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் குரோம் என்பது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராகும். கூகுள் குரோம் பிரவுசரை தினமும் மில்லியன் கணக்கான பயனர்கள் அணுகுகிறார்கள்.. குரோம் மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய பிரவுசர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. இந்நிலையில் இணைய தாக்குதல்களில் இருந்து பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, கூகுள் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி […]

தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது என்ற முழுமையான செயல்முறை விவரம் பலருக்கு தெரிந்திருக்காது. உங்கள் இ-சலான் வைத்து ஆன்லைனிலும் […]

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் […]

உலக அளவில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் டிவி, பிரிட்ஜ், ஏசி என வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி செல்போன்கள் வரை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் சாம்சங் பிராண்டிற்கு என தனி வாடிக்கையாளர் கூட்டமே உள்ளது. குறிப்பாக செல்போன் விற்பனையில் இந்தியாவில் தனக்கென தனி இடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது. அவ்வபோது லேட்டஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளையும் வெளியிட்டு வருகிறது. […]

அண்மையில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் அடிப்படையில் மூன்று குறை தீர்வு மேல்முறையீட்டுக் குழுக்களை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மூன்று மேல்முறையீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஐடி விதிகள், நீதிமன்றங்களைத் தவிர, குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்குவதற்கும், புதிய பொறுப்புக்கூறல் தரங்களை உறுதி செய்வதன் மூலம் […]

பிரபல எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான இ-பைக் கோ நிறுவனம் மின்சார வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் பிரபலம். இந்நிறுவனம் தற்போது மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. டிரான்சில் பிராண்டின் கீழ் டிரான்சில் இ1 எனும் எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை ரூ.45 ஆயிரம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், இந்த சைக்கிளில் அதற்கேற்ற சிறப்பம்சங்கள் […]

பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை லாபமாக ஈட்டிய நிலையில் கூகுள் நிறுவனம், ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதற்கு பொறுப்பான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூகுள் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு, உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து வருகிறது. இதனால் லாபமீட்டும் நிறுவனம், சிறப்பாக செயல்படாத நிறுவனம் என பாகுபாடின்றி பெரும்பாலான நிறுவனங்கள், முதற்கட்டமாக பணியாளர்களில் கணிசமானோரை […]

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால். பலரும் பிஎஸ்.என்.எல் சிம்மை 2-வது சிம்-ஆக பயன்படுத்துகின்றனர்.. இந்நிலையில் பிஎஸ்.என்.எல் நிறுவனம் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. ரூ.1198-க்கு வழங்கப்படும் […]