இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் திறன் கொண்டவை. இந்த எரிபொருள் பூமியி்ல் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிப்படுகிறது. ஆனால், பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று நமக்குத் தெரியாது. இதனால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதை முன்னெடுத்து வருகின்றன. இதையடுத்து தற்போது ஹைபிரிட் […]

அமேசான் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அலெக்சா (Alexa) என்ற, ஸ்மார் டிஜிட்டல் குரல் உதவி கருவியை (Digital voice assistant) அறிமுகம் செய்தது.. இந்தியாவில் அலெக்சா அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஸ்மார்ட் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களைக் கட்டுப்படுத்துதல், கிரிக்கெட் ஸ்கோர் பற்றிய ரியல் டைம் அப்டேட்களை வழங்குதல், பிற நிகழ்நேர தகவல்களை வழங்குத என பல வகையில் அலெக்சா உதவி செய்கிறது.. மேலும் உங்கள் தேவைக்கேற்ப […]

ஆதார் விவரங்களை புதுப்பிக்க உங்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதற்கு விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று சேவையை […]

கூகுள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க அங்கு பணிபுரியும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. இவ்வாறு பணிநீக்க செயல்முறையை நிறுவனம் கையாளும் விதம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கூகுள் ஊழியர்கள் நள்ளிரவில் சிஸ்டத்தை பயன்படுத்த முடியாமல் அணுகல் இழந்தனர். மேலும் அவர்களில் பெரும்பாலோருக்கு நிறுவனம் எவ்வாறு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது மற்றும் […]

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.. இந்நிலையில் தற்போது 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.. ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்.. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை […]

பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிப்பொருளாகும். […]

மத்திய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த புதிய உத்தரவு ஏப்ரல் […]

உலகளவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது.. ஸ்மார்ட்போனை சரியாக இயக்கவும், அதை சரியான கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கவும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் மிகவும் முக்கியமானது.. இந்த நிலையில் இந்தியா முதன்முதலாக ஒரு பாதுகாப்பான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி உள்ளது.. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட OS-ஐ சென்னை ஐஐடி, ஜாண்ட்கே ஆபரேஷன்ஸ் லிமிடெட் உதவியுடன் உருவாக்கி உள்ளது.. இதற்கு BharOS என்று பெயரிடப்பட்டுள்ளது… பிரதமர் […]