சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்த சமீபத்திய செய்திகளை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆன்லைனில் எரிவாயு முன்பதிவுகளைத் தேடும் நுகர்வோரை அவர்கள் குறிவைத்து புதிய வகையான மோசடிகளை செய்து வருகின்றனர். சிலிண்டரை உடனடியாக வழங்குவதாகவும், கூடுதல் சிலிண்டர்களை வழங்குவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முன்கூட்டியே பணம் செலுத்தினால் கேஸ் அவசரமாக வழங்கப்படும் என்று வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் போலி வலைத்தள […]

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஹேக்கிங் ஆபத்தில் இருக்கலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சாதனங்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் ஏற்படும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணித்து வருகிறது. CERT-In வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் உள்ள […]

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் சேவை கோளாறுகளை பதிவு செய்யும் டவுன் டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில் 10,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள மெசேஜ் (Direct Message) வசதியில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். பலர் மற்றவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியவில்லை என்று கூறினர். டவுன் டிடெக்டர் தளத்தில் வெளியான ஸ்கிரீன் […]

இந்தியாவில் 550 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள பயனர்களுக்கு ‘Add Chat Shortcut’ என்ற அம்சம் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் விரைவாக செய்தி அனுப்ப அல்லது அழைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். செயலியைத் திறக்காமலேயே உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்களை இணைக்கும் அந்த ரகசிய தந்திரம் என்ன […]

ஆரக்கிள் (Oracle) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 20,000 முதல் 30,000 வரை பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) அடித்தளத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய முதலீடுகளால் செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பணிநீக்கங்கள் இந்த மாதத்திலேயே தொடங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும், […]

கென்யாவின் நைரோபி நகரத்தில் இருக்கும் தொழில்நுட்ப ஊழியர்கள், உங்கள் மெட்டா AI ஸ்மார்ட் கண்ணாடி மூலம் செய்திருக்கக்கூடிய வீடியோக்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ கிளிப்புகளை அவர்கள் பார்த்து, அவற்றுக்கு விளக்கக் குறிப்புகள் சேர்த்து வருகின்றனர். இது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை பயிற்றுவிப்பதற்கான தரவு தயாரிப்பு செயல்முறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டமாகும். கென்யாவில் […]

OpenAI நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டதற்குப் பிறகு, ChatGPT-ஐ புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறும் ஒரு இணையதளம், இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ChatGPT சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது. OpenAI-க்கு ChatGPT மூலம் 90 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், Department of Defense தங்கள் ரகசிய நெட்வொர்க்கில் OpenAI-யின் AI […]

கோடை காலம் தொடங்கிவிட்டாலே வீடுகளில் மின்சார மீட்டர்கள் சுழலும் வேகம் அதிகரித்து விடுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC) வாங்குவது இன்று பலருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இருப்பினும், ஏசி வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் “கரண்ட் பில் எகிறிவிடுமோ?” என்கிற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே எப்போதும் உண்டு. ஒரு ஏசி எவ்வளவு மின்சாரத்தை உறிஞ்சும், அதை எப்படிப் புத்திசாலித்தனமாக தவிர்க்கலாம் என்பது குறித்த விரிவான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ஸ்டார் […]

மார்ச் 1 முதல், இந்தியாவில் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்கள் இதுவரை பயன்படுத்தியதைப் போல பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். ‘SIM Binding’ எனப்படும் புதிய ஒழுங்குமுறை விதிமுறையின் கீழ், கணக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு அந்த மொபைல் சாதனத்திலேயே, செயல்பாட்டில் (active) இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தகவல்தொடர்பு துறை (DoT) வழங்கியுள்ளது. இதன் மூலம், முன்பு […]