இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]

தென்கிழக்கு ஆசியாவில் இதய நோய் அபாயம் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) கவலை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் ஒவ்வொரு நிமிடமும் எட்டு பேர் இதய நோயால் இறக்கின்றனர், இதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகும். இதய நோயை எதிர்த்துப் போராட புகையிலை மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை WHO வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒவ்வொரு நிமிடமும் […]

ஆண்டு தோறும் செப்டம்பர் 30 ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று, ஒவ்வொரு மொழியிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும் சொற்களைப் பற்றி அறிந்து கொள்வோம். சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று, செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் சொற்களஞ்சிய வல்லுநர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மொழி வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களுக்கு […]

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஐந்து குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆபத்து பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தோன்றும் 5 அறிகுறிகள்: ஆராய்ச்சியின் படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு முந்தைய நாட்களில் பெண்கள் இந்த அறிகுறிகளை அனுபவிப்பார்கள்: அசாதாரண சோர்வு – 71%தூக்கக் கலக்கம் – 48%மூச்சுத் திணறல் – […]

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் […]

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை […]