பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
காண்டாமிருகங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், உலக வனவிலங்கு நிதியம்-தென்னாப்பிரிக்கா உலக காண்டாமிருக தினத்தைத் தொடங்கியது, அடுத்த ஆண்டே அது உலகளாவிய நிகழ்வாக மாறியது . உலக காண்டாமிருக தினத்தின் முக்கியத்துவம்: பல வனவிலங்கு இனங்களைப் போலவே, காண்டாமிருகங்களும் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. சர்வதேச […]
சுமார் 375 பொருட்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருவதால், சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை இன்று முதல் விலை குறையும். அந்தவகையில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு மிகப்பெரிய ஜிஎஸ்டி குறைப்பை அறிவித்துள்ளது. “புற்றுநோய், அரிய நோய்கள் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளன. பல மருந்துகள் 12 […]
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 23 முதல் 26 வரை 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம் என்றும், அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் […]
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ரேஷன் அட்டையின் வகையை மாற்றிக்கொள்ள முடியும். பொதுவாக, தமிழ்நாடு அரசு அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் (NPHH), சர்க்கரை ரேஷன் கார்டு மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டை என பல வகைகளில் அட்டைகளை வழங்குகிறது. உங்கள் தற்போதைய ரேஷன் அட்டை, உங்களின் தற்போதைய பொருளாதார நிலைக்கு பொருந்தவில்லை என்றால், அதை […]
நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று (செப்டம்பர் 22) துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமியும் நிறைவடைகிறது. வழக்கமாக நவராத்திரி என்பது சரஸ்வதி பூஜை வரையிலான ஒன்பது நாட்களும், விஜயதசமி பத்தாவது நாளிலும் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் மிக அபூர்வமாக நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டும் அபூர்வமாக […]
சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில், தற்போதைய நான்கு வகை வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன: 5% – அத்தியாவசியப் பொருட்கள்18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்40% – பிற பொருட்கள் (தூயிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் […]
தமிழ்நாடு அரசு, மீன் வளர்ப்பு மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பு தொழில் செய்வோர், தங்கள் தொழிலை விரிவாக்கி கொள்ள முடியும். நன்னீர் மீன்வளர்ப்பு : ஒரு ஹெக்டேருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.11 லட்சத்தில், பொதுப் பிரிவினருக்கு ரூ.4.40 லட்சம் (40%) வரையும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.6.60 […]
நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாளை, செப்.22 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 அடுக்குகளில் இருந்து (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ‘sin goods’ எனப்படும் ஆடம்பரப் பொருட்களுக்கு […]
நாட்டின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ‘சென்னை ஒன்’ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னையின் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் இந்த புதுமையான செயலியை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வடிவமைத்துள்ளது. இந்த செயலியின் அறிமுகம், CUMTA-வின் இரண்டாவது ஆணையக் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், முதல்வர் இந்த செயலியைத் தொடங்கி வைப்பதோடு, அடுத்த […]

