பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “அன்பு கரங்கள்” என்ற சிறப்பு திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அவர்களுக்கு கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை […]

சென்னை ராயப்பேட்டையில் தெருநாய் கடித்து தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தடுப்பூசி போட்ட பின்னரும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா..? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அவசரகால சிகிச்சை சிறப்பு மருத்துவர் சையது ஹாரிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு மிக […]

பிளாஸ்டிக் நாற்காலியின் பின்புறத்தில் சிறிய துளை இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால், அவை இருப்பதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. உண்மையில் அந்த துளை அங்கே இருப்பதற்கு இரண்டு நல்ல காரணங்கள் உள்ளன . ஒரு காரணம் நாற்காலிகளை அடுக்கி வைப்பது தொடர்பானது.பிளாஸ்டிக் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்படும்போது, ​​அவை நாற்காலிகளுக்கு இடையில் ஒரு காற்றுப் பையை உருவாக்குகின்றன, இதனால் நாற்காலிகள் ஒன்றோடொன்று உறிஞ்சப்படுவதுபோல் (suction effect) உணரப்படுகிறது, இதுவே […]

EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் தவணை செலுத்தவில்லை என்றால், அவர்களின் போன்கள் ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்த உள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த புதிய […]