இப்போதெல்லாம் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், நகரங்களில் சம்பளம் குறைவு, செலவுகள் அதிகமாக இருக்கும். வேலைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பல இளைஞர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தேனீ வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.. தேனுடன் சேர்த்து, அவற்றிலிருந்து பெறப்படும் பிற பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் […]

இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]

இந்தியாவின் விண்வெளிப் பயண வரலாற்றில் புதிய அத்தியாயமாக, சுபன்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்கிறார். பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4′ என்ற மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். டிராகன் காப்ஸ்யூல்: […]

1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]

நிலம், வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது பத்திரப்பதிவில் பொதுவாக மக்களிடையே இருக்கும் கவனத்தை விட, பட்டா பெறும் நடவடிக்கையில் இன்னும் அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய தவறுகள் கூட, பின் நாட்களில் நீண்ட கால நீதிமன்ற வழக்குகளாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். நிலம் வாங்கும் முன் பின்பற்ற வேண்டியவை: விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றி, DTCP அனுமதியின்றி விற்பனை […]

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைகள் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை கூடுதல் சிறப்புடையதாகும். தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போல் ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்புடையதாகும். இதை ஆஷாட அமாவாசை என்றும் சொல்லுவதுண்டு. அமாவாசை திதி, ஒரு குறிப்பிட்ட கிழமைகள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து வரும் போது அது அதிக சிறப்புடையதாக சொல்லப்படுகிறது. ஆனி […]

`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது. இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும். ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? பீகார் […]

வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் […]

வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் […]