ஹெட்செட் பயன்படுத்துவது மற்றும் சத்தமாக இசையமைக்கும் இடங்களில் பயணிப்பது காரணமாக 100 கோடிக்கும் மேலான இளைஞர்கள், வயது வந்தோர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற தனிப்பட்ட கேட்கும் […]

முன்னுரிமை பட்டியலில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும் அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சட்டபேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்ட வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை […]

நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், “வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில […]

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வரும் 27ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை ) இடம்: மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி பங்குபெறும் நிறுவனங்கள்: உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி […]

நமக்கு எந்த ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலும் முதலில் நினைவுக்கு வருவது கூகுள்தான். இத்தகைய கூகுள் இருக்கும் போது வேறென்ன கவலை என்ற அளவுக்கு ஆகிவிட்டது நவீன உலகம். அப்படிப்பட்ட கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார் தெரியுமா? கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் இயர்பெயர் பிச்சை சுந்தரராஜன். 1972ல் ஜூன் 10ம் தேதி மதுரையில் பிறந்தார். சுந்தர் பிச்சையின் தந்தை பெயர்-ரெகுநாதர், தாய் பெயர் லட்சுமி தேவி. […]

உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் வரும் 22ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஓசூர் டாடா நிறுவனம் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. வேலைவாய்ப்பு முகாமில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 […]

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான […]

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று நோய் அபாயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக விமானத்தில் பயணிப்போருக்கு அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த விதிமுறை விமானத்தில் மட்டுமின்றி பேருந்துகள், பொது இடங்கள், அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இதன் […]

எக்காரணத்தைக் கொண்டும் எரியாத பல்புகள், ஃபியூஸ் ஆன ட்யூப் லைட்டுகள், ஸ்பீக்கர் காந்தங்கள் உள்பட எக்காரணத்தை கொண்டும் சேமித்து வைக்காதீர்கள். ஏன் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்… வீட்டில் பழைய பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ள கூடாது எனவும் இதில் அப்படி என்ன ஆபத்து உள்ளது என இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். […]

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் […]