ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் 2023-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கான தகுதித்தேர்வு வருகின்ற நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப்பயிற்சி மையம் தெரிவித்துள்ளது . இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு; தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா […]

திண்டுக்கல்லில் இன்று நடக்க இருக்கும் காந்தி கிராமம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலம், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்து கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட காவல் […]

பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் ஸ்போர்ட்ஸ் ஃபிபா உலககோப்பை நிகழ்வை அறிமுகம் செய்கின்றது. இதைக் காண  […]

இனி ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையில் ஏற்படும் மாற்றங்களை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிகளின்படி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு […]

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், உயர்கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி […]

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நவ.1ஆம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கிடையே, ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் […]

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் செப்.10ஆம் தேதி முதல் மின்கட்டண ஆணை நடைமுறைக்கு வந்தது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால், ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட […]

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள […]

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து […]