தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல்‌, வனங்கள்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ அமைச்சகம்‌, இந்திய அரசின்‌ மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள்‌ அக்டோபர்‌ 1, 2016 முதல்‌ நடைமுறைபடுத்தப்பட்டது. மின்‌-கழிவு (மேலாண்மை) விதிகள்‌, 2016-ன்கீழ்‌, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌- கழிவு புதுப்பிப்பாளர்களால்‌ மட்டுமே மின்கழிவுகளைச்‌ சேகரித்து செயலாக்க முடியும்‌ மேலும்‌ மத்திய மாசுகட்டுபாடு வாரியத்திடம்‌ […]

ஆதார் இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியம். அரசாங்கம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மிகவும் பழமையானதாக இருக்கும்.. இதனால் சில நேரங்களில் நம்முடைய முக அடையாளங்கள் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது.. எனவே, ஆதார் […]

பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை வெளியிட்டு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை தொடர்பான மானியக்‌ கோரிக்கையின்‌ போது வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ தமிழகத்தில்‌ 1998-க்கு பின்னர்‌ புதியதாக ஆவண எழுத்தர்‌ உரிமங்கள்‌ வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும்‌ ஆவணங்களின்‌ எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால்‌, கூடுதல்‌ ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக்‌ கருத்தில்‌ […]

ஐடி கணக்கு தாக்கல் செய்ய ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு கணக்குத் தாக்கல் செய்வதற்காக தற்போது 7 வகை படிவங்கள் இருக்கிறது. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான விதமாக ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இது பற்றிய அறிவிப்பை மத்திய […]

சேலம் மாவட்டத்தின் எடப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி, ஓமலூர், ஏற்காடு, சுங்கரி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம். பணி விவரம்: கிராம உதவியாளர் (Village Assitant) காலிப்பணியிட விவரம்: எடப்பாடி – 2 கெங்கவல்லி – 2 காடையாம்பட்டி […]

வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்ட அறிக்கையில், ”வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் […]

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று காலை 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் […]

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நீங்கள் தொலைத்துவிட்டால் பணம் செலவழிக்காமல் அபராதம் கட்டாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முன்பதிவு செய்த டிக்கெட் ஏதோ ஒரு சில காரணங்களால் தொலைந்துவிட்டாலோ அல்லது அவசரத்திற்கு கையில் கிடைக்கவில்லை என்றாலோ நமக்கு இழப்பு ஏற்படும். டிக்கெட் சோதனையின் போது காட்டவில்லை என்றால் நாம் அபராதம் செலுத்த நேரிடும். அதே நேரத்தில் பயணமும் செய்ய வேண்டும். அபராதம் கட்டக்கூடாது என்ன செய்யலாம். இப்படி […]

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது வைத்திருக்கும் பலருக்கும் அதன் அம்சங்கள் பற்றி எதுவும் முழுமையாக தெரிவதில்லை. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலம் உங்களின் சாப்பாட்டு செலவில் ஆயிரக்கணக்கான ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் இந்த அம்சம் உள்ளது. அதாவது காலை உணவு, மதியம் மற்றும் இரவு உணவிற்காக உங்கள் செலவை குறைக்க முடியும். […]

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும், இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமின்றி […]