கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ […]

பொதுவாக பண்டிகை காலம் என்று வந்து விட்டாலே சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வாசிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த பக்ரீத் பண்டிகை வருவதால் மாநிலம் முழுவதும் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள் பொதுமக்கள். ஆகவே பயணிகள் […]

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் வாங்குபவர்கள் வருடம் தோறும் அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வூதியம் வாங்குகிறார்களோ, அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதேபோலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட இரண்டும் வாங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் வாங்குபவரின் ஓய்வு பெற்ற மாத கணக்கில் வைத்து வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்று வழங்கப்பட வேண்டிய மாதத்தில் வழங்கப்படாவிட்டால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும் அதற்குள்ளாக வாழ்நாள் […]

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:15 மணியளவில் புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12 10 மணியளவில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12 43 மணி அளவில் திருநெல்வேலிக்கு நாளை காலை 11 45 மணி அளவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு தொடர்பாக புதிய திட்டம் ஒன்றை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டவை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமானது. தற்சமயம் இந்த திட்டம் சென்னையில் இருக்கின்ற பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் விதமாக வாக்காளர்கள் விபரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை மாதம் 21ம் தேதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரி பார்க்கும் பணி ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் மாதம் 21 வரையில் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் […]

எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அறிமுகமாகும். புதிய வாகனங்கள் முழுவதும் எத்தனாலில் இயங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தட்பவெப்ப சூழ்நிலை மாறி இருப்பதால் தற்சமயம் 47 டிகிரி வரையில் வெப்பம் காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், இதில் நம்முடைய ஓட்டுனர்களின் நிலையை […]

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக சிகிச்சை உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக 67 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றனர். நிறுவனத்தின் பெயர்:Tamil nadu medical staff selection board பதவியின் பெயர்:herapeutic assistant கல்வி தகுதி: degree in engineering or technology, diploma in engineering or technology சம்பளம்:18000-56,900 வயதுவரம்பு:18-32 years கடைசி தேதி: 10/7/2023 இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து […]

தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி […]

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு எந்தெந்த வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த […]