சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்து குழந்தைகள் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அக்டோபர் 6, 2025 நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மற்றும் பெதுலில் குறைந்தது 16 குழந்தைகள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தானில் மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகளுக்கு முதன்மையான காரணம் இருமல் சிரப்பில் காணப்படும் நச்சு இரசாயனமான டைஎதிலீன் கிளைக்கால் […]

தெற்கு ஆபிரிக்காவில் உள்ள சுவாசிலாந்து மன்னர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அபுதாபி விமான நிலையத்தில் பிரமாண்டமாக நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது. தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி, ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கி வருகிறார். 1986 முதல் எஸ்வாட்டினி நாட்டை ஆண்டு வரும் 57 வயதான இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான […]

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS) மத்திய அரசு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், வரும் அக்.15-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன. மானிய ஒதுக்கீடு அதிகரிப்பு : வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் பெற்ற உணவுப் பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீட்டை அரசு உயர்த்த […]

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது வரை 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. இத்திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் அல்லது புதிதாக தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிப்பதற்காக வரும் நவம்பர் மாதம் வரை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும், போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் சேவைகளையும் உறுதி செய்யும் விதமாக, ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (RC) சரியான தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மொபைல் எண் இணைப்பின் அவசியம் என்ன..? போக்குவரத்துத் துறை அதன் முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே அனுப்புகிறது. குறிப்பாக, இன்சூரன்ஸ் முடிவு […]

வங்கிச் சேவை முதல் அரசுத் துறைச் சேவைகள் வரை அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள ஆதார் அட்டையில், விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஒருபுறம் இருந்தாலும், 7 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்வதற்கான கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து சலுகை அளித்துள்ளது. பயனர்கள் ஆதார் சேவை மையங்களில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளைப் […]

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]