அதிவேக ரயில்கள் உலகின் பல நாடுகளில் இருந்தாலும், சீனாவின் புல்லட் ரயில்கள் அதன் மென்மையான ஓட்டம், பொறியியல் நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகளால் தனித்தன்மை பெற்றவை. தற்போது, இந்த ரயில்களின் நிலைத்தன்மையை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பயண வீடியோ பதிவாலரான லவ்ப்ரீத் ஜக்கி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், மணிக்கு 280 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஜன்னலில் நாணயத்தை […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
நடப்பாண்டில் கோவிட்-19 மீண்டும் பரவுவது கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடிய அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, அரசாங்கம் பொதுமக்களிடம் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா முதன்முதலில் 2019 ஆம் […]
கிரேக்க நாட்டில் உள்ள ரோட்ஸ் கடற்கரையில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரோட்ஸ் கடற்கரையிலிருந்து 16 மைல் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் பெரும்பகுதியை உலுக்கியது .இந்த நிலநடுக்கம் துருக்கி, எகிப்து, சிரியா, கிரீஸ் மற்றும் அருகிலுள்ள பல நாடுகளிலும் உணரப்பட்டதாக பிராந்திய நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டோடெக்கானீஸ் தீவுகள் பகுதியில் 68 கிலோமீட்டர் (42 மைல்) […]
இந்தியாவின் மிக நீளமான சாலை பற்றி பேசும்போது, நேஷனல் ஹைவே 44 (NH 44) தான் முதன்மை. இதன் மொத்த நீளம் சுமார் 4,112 கிலோமீட்டர்கள். இது ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது, இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரையிலான முக்கிய சாலை மார்க்கமாகும். ஆனால், உலகிலேயே மிக நீளமான சாலை பற்றி பேசும்போது, அதன் அளவு வியக்க வைக்கும் வகையிலுள்ளது. உலகின் மிக நீளமான […]
போர் நிறுத்துவது தொடர்பாக, ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சு நடத்தினர். முதற்கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இந்த பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஇருந்தது. ஆனால், எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என, ரஷ்யா தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: […]
துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2, 2025) ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, சந்திப்பு ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளின் பிரதிநிதிகளின் அணுகுமுறையும் கடுமையாகவே இருந்தது. துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான், இஸ்தான்புல்லின் சிராகன் அரண்மனையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார். இது ஒட்டோமான் […]
உலகிலேயே மிகவும் சிறிய நாடான ”துவாலு” பற்றியும், அங்குள்ள வாழ்க்கை முறை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். துவாலு என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். மேற்கு – மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான துவாலு, சுமார் 420 மைல்கள் (676 கிமீ) தொலைவில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கே ஒரு சங்கிலியில் சிதறிக்கிடக்கும் ஒன்பது சிறிய பவளத் தீவுகளால் ஆனது. உலகிலேயே மிகவும் சிறிய […]
கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானியும், மருத்துவருமான எட்டியென்- எமிலி பவுலியூ, 98, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம்காலமானார். கடந்த, 1926ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் எட்டியென் ப்ளூமில் பிறந்த பவுலியூ, நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் ஆவார். ஸ்டீராய்டு ஹார்மோன்களில் அவரது ஆராய்ச்சிகள், மருத்துவத் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. கடந்த 1963ல் தனியாக ஹார்மோன் ஆராய்ச்சி பிரிவை அவர் நிறுவினார். அதன் தலைவராக, 1997 வரை இருந்தார். கருக்கலைப்புக்கான, […]
நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது […]
கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கர காட்டுத்தீ தொடர்ந்து பரவி, காற்றின் தரத்தைப் பாதித்தது, இதனால் மனிடோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலத்திலிருந்து சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அடுத்து மனிடோபாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயால் […]

