வெள்ளிக்கிழமை, ஈரானில் மக்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களை அடக்க அரசாங்கம் நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கிய நிலையில், இந்த ஒடுக்குமுறையால் ஏற்கனவே பல டஜன் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில், வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது என்பதற்கான கோபமே இந்த இயக்கத்தின் காரணமாக இருந்தது. […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா ஏதாவது செய்யும்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இந்தக் கருத்தை அவர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை தலைமை நிர்வாகிகளுடன் நடந்த ஊடக சந்திப்பின் போது கூறினார். கிரீன்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப் “ நாம் கிரீன்லாந்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், […]

இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் வாங்க ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு முற்றிலும் மாறாக, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், தங்கத்தின் விலை ஒரு கப் தேநீரின் விலையை விடக் குறைவாக உள்ளது. இதை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால் இதுதான் அங்கு இன்றைய யதார்த்தம். தற்போது, ​​இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு சுமார் ரூ. 13,800 ஆக உள்ளது. வெனிசுலாவில், அதே தங்கம் […]

Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது பிரிந்த மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் இடையே அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.. இந்த வழக்கில், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ₹15,278 கோடி) மதிப்பிலான பத்திரம் (bond) செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த உத்தரவு, குழந்தை காவல் (child custody), திருமண காலத்தில் […]

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போராட்டங்கள் வியாழக்கிழமை உச்சத்தை எட்டின. நாடு முழுவதும் அரசு இணைய சேவையை முடக்கிய நிலையிலும், மதகுரு ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்தது. போராட்டங்களில் ஏற்பட்ட அடக்குமுறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. போராட்டத்தின் தொடக்கம் இந்த கலவரம் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தெஹரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஜார் சந்தை மூடப்பட்டதால் தொடங்கியது. ஈரானின் நாணயம் […]

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டென்மார்க்கின் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் எந்தப் பகுதியிலும் வெளிநாட்டு படைகள் ஊடுருவ முயன்றால், தங்கள் வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி எதிர்த்து போராட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 1952ஆம் ஆண்டு, குளிர்ப்போர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பழைய உத்தரவு இன்னும் நடைமுறையில் […]

சர்வதேச அரசியல் களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்து இருப்பதை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா மறைமுகமாக உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், […]

அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ரஷ்யாவுக்கு எதிரான இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் மசோதா (Russia Sanctions Bill) என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யாவுடன் தெரிந்தே எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு […]

பாஜக தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டு, 2025 ஏப்ரலில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் எவ்வளவு பதற்றமடைந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை கடுமையாகக் குலுக்கியதாகவும், அதனால் அவர்கள் அமெரிக்க அரசிடம் போர் நிறுத்தம் கோரி மன்றாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் மால்வியா வெளியிட்ட தகவல் […]

இந்திய பொருளாதாரத்திற்கும், சாமானிய வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2026 ஜனவரியில் இந்திய கச்சா எண்ணெய் கூடையின் சராசரி விலை பீப்பாய்க்கு $59.92 ஆக குறைந்துள்ளது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த மைல்கல்லை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. உலகளவில் விநியோகம் அதிகரித்ததும், அதே சமயம் […]