சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் காலரா தொற்றும் வேகமெடுத்துள்ள நிலையில், பரவி வரும் புதிய காலரா வைரஸ் 10 லட்சம் குழந்தைகளை பாதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் […]

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகோனிச்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் கிளிமோவோவிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் எஞ்சின் உட்பட பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் […]

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் நமது நெருங்கிய நட்பு நாடுகள் கூட நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட நமது நாட்டிற்கு நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக ஒப்புக்கொண்டார். “சீனா பாகிஸ்தானின் பழமையான நண்பர். சவுதி அரேபியா, […]

மிஸ் உலகம் 2025 பட்டத்தை தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றுள்ளார். இதன் மூலம் மிஸ் உலக கிரீடம் ஆசிய கண்டத்திற்கு வந்துள்ளது. இறுதிச் சுற்றில் மார்ட்டினிக் (அரெல்லி ஜாவோச்சிம்), எத்தியோப்பியா (ஹசெட் டிரெஜ் அட்மாசு), போலந்து (மஜா லாட்ஜா), தாய்லாந்து (ஓபல் சுசாதா சௌங்ஸ்ரி) ஆகியோர் இடம்பிடித்தனர். இவர்களில் இறுதி வெற்றியாளராக மிஸ் தாய்லாந்து ஓபல் சுசாதா அறிவிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி […]

உலகம் முழுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவது பற்றி பேசப்பட்டாலும், சில இடங்களில் பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காகப் போராடி வருகின்றனர். ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்கள் வெளியே சென்று சுதந்திரமாக தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள், இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வேறு சில நாடுகளிலும் இதுதான் நிலைமை. உலகில் பெண்கள் மட்டுமே ஆட்சி செய்யும் ஒரு இடத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இங்கு ஆண்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் […]

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]

வடக்கு நைஜீரியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக பெயத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 117 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் தலைநகரான அபுஜாவிலிருந்து மேற்கே 180 மைல்கள் (300 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நைஜர் மாநிலத்தில் உள்ள மோக்வா நகரில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. வடக்கு நைஜீரியாவில் […]

பலூசிஸ்தானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியதாக பலூச் விடுதலைப் படை கூறியுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுராப் நகரை பலூச் போராளிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சூராப் நகரத்தில் உள்ள காவல் நிலையத்தை சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்து எரித்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு BLA பொறுப்பேற்றுள்ளது இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் போராளிகள், சூரப் நகரத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் […]

தாய்லாந்தில் உள்ள ‘டைகர் கிங்டம்’ எனும் விலங்குப் பூங்காவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது திடீரென தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பார்வையாளர்களின் பாதுகாப்பு, மற்றும் விலங்குகளை சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக பயன்படுத்தும் நடைமுறை குறித்து பலரிடையே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்திய பயணிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்றும், அவருக்குத் […]

வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, ​​புற்றுநோய்களின் பாதிப்பு ஒரு லட்சம் பேரில் 173 முதல் 280 வழக்குகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் புவி வெப்பமடைதல் பெண்களுக்கு புற்றுநோயை மிகவும் பொதுவானதாகவும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதி உலகின் பிற பகுதிகளை விட மூன்று தசாப்தங்களுக்கு முன்பே மூன்று முதல் நான்கு […]