போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இஸ்ரேல், லெபனான் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையே 2024ம் ஆண்டு போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிடான் நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் […]

மியான்மரின் அயேயர்வாடி டெல்டாவின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. குடிநீரில் உள்ள ஆர்சனிக் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, இப்பகுதியில் உள்ள 71% ​​கிணறுகளில் பாதுகாப்பான வரம்புகளை விட ஆர்சனிக் இருப்பதாகவும், இதனால் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆர்சனிக் என்பது As என்ற குறியீட்டையும், அணு எண் 33யும் கொண்ட […]

பூமியின் சுழற்சி ஒருபோதும் முழுமையாக நிலையானது அல்ல. பனிப்பாறைகள் உருகினால் அல்லது பெரிய அளவிலான எடை நகர்ந்தால், பூமி லேசாகச் சாயும் அல்லது அதன் சுழற்சி மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இந்தநிலையில் பூமி தனது அச்சில் இருந்து 31 அங்குலம் விலகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீர்ப்பாசனம் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்காக அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், 1993 மற்றும் 2010 க்கு இடையில், தோராயமாக […]

சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று காலை, மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு டீசல் டாங்கருடன் மோதியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில், மதீனாவிற்கு 160 கிமீ தொலைவில் […]

இன்று காலை கொல்வெஸி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ரன் வேயில் இருந்து சறுக்கிய ஒரு பட்டய விமானம் தீப்பற்றி எரிந்த சம்பவம் காங்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காங்கோ ஜனநாயக குடியரசின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா மற்றும் அவரது குழுவினர் அந்த விமானத்தில் இருந்தனர்.. விமானத்தின் பின்புறம் முழுவதும் சில விநாடிகளிலேயே தீ பரவத்தொடங்கியது.. எனினும் அனைத்து பயணிகளும் தீப்பரவுவதற்கு முன்பே உடனே வெளியேறி உயிர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐ.நா. தீர்மானம், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை ஆதரிப்பதோடு, பாலஸ்தீனப் பிரதேசத்தில் சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அனுப்பவும் அங்கீகாரம் அளிக்கிறது. இருப்பினும், இந்த ஐ.நா. நடவடிக்கையை ஹமாஸ் எதிர்க்கிறது. காசா அமைதித் திட்ட முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்து, பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், காசா மீது […]

சவுதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 42 இந்திய யாத்ரீகர்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது சவுதி அரேபியாவின் மதீனா அருகே நேற்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான […]

பாகிஸ்தான் ராப் பாடகர் தல்ஹா அஞ்சும், சமீபத்தில் தனது இசை காரணமாக இல்லாமல், வேறு காரணத்திற்காகவே செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். நேபாளில் நடந்த தனது கச்சேரி ஒன்றில் அவர் இந்தியக் கொடியை அசைத்தது தொடர்பான சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியா–பாகிஸ்தான் ரசிகர்களிடையே பாராட்டுகளையும் கடும் எதிர்ப்புகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கியுள்ளது. வைரலான கச்சேரி தருணம் உருது ராப் பாடல்களுக்காக பிரபலமான, கராச்சியை […]

சவுதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் […]

கடந்த ஆண்டு டாக்காவில் அரசு எதிர்ப்பு மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” குறித்த வழக்கில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஹசினா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து, அதற்கு பின் டெல்லியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு வீட்டில் தங்கி வருவதாக, அவரது […]