அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலாந்து கடற்கரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு விசித்திரமான விலங்கின் உடல் ஒதுங்கியது. இதற்கு “மான்டாக் மான்ஸ்டர்” என்று பெயரிடப்பட்டது. இந்த விலங்கின் தோற்றம் மிகவும் வினோதமாக இருந்ததால், இது ஏதோ அரசு ஆய்வகத்தில் இருந்து தப்பி வந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினமாக இருக்கலாம் அல்லது இதுவரை யாரும் பார்த்திராத புதிய விலங்காக இருக்கலாம் எனப் பலவிதமான வதந்திகளும் கற்பனைகளும் […]

நேற்று மாலை ஒரு மருத்துவமனை மீது மியான்மர் இராணுவம் நடத்திய ஒரு கொடிய விமானத் தாக்குதலில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, இந்த கொடிய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.. 68 பேர் காயமடைந்தனர். 2021 ஆம் ஆண்டில், பத்தாண்டுகால ஜனநாயக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த ராணுவ புரட்சிக்குப் பிறகு, கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்காக ராணுவம் ஆண்டு தோறும் […]

உலக வரைபடத்தில் சிறிய புள்ளிகளாகத் தோன்றும் சில நாடுகளின் நாணயங்கள் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை. அவற்றில் ஒன்று ஜோர்டானிய தினார். 1.12 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்த நாட்டின் நாணயம் இந்திய ரூபாயை விட மிகவும் மதிப்புமிக்கது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி.. 1 ஜோர்டானிய தினார் தோராயமாக ரூ.126.8 இந்திய ரூபாய் மதிப்புடையது. அதாவது, ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 0.00788 ஜோர்டானிய தினார் மட்டுமே. ஜோர்டானில் […]

டொனால்டு ட்ரம்ப் கோல்டு கார்ட் முதலீட்டாளர் அமெரிக்க விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது சமூக ஊடகமான Truth Social-ல் இதுபற்றி அறிவித்தார். அதன்படி, இணையதளம் தற்போது செயல்படத் தொடங்கி, 1 மில்லியன் டாலர் அமெரிக்க விசா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது. ட்ரம்ப் இந்த கோல்டு கார்டு திட்டத்தை இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் ஒரு செயலகத் திருத்து (executive order) மூலம் தொடங்கினார். இப்போது அந்த உத்தரவு […]

ஐரோப்பா முழுவதும் மிகவும் அரிதான மற்றும் தீவிரமான புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு கோளாறுடன் ஒரு விந்தணு தானம் செய்யும் நபர் குறைந்தது 197 குழந்தைகளின் தந்தையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. 14 நாடுகளின் பொதுச்சேவை ஒளிபரப்பாளர்கள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.. இந்த விந்தணுக்கள் கொபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய விந்து வங்கி (European Sperm Bank – ESB) மூலம் 14 நாடுகளில் உள்ள 67 […]

மொராக்கோவின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸ் நகரில் புதன்கிழமை இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.. மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.. சில காலமாக கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.. அதன் அருகிலுள்ள நான்கு மாடி கட்டிடங்கள் இரண்டும் ஒரே இரவில் இடிந்து விழுந்ததாக ஃபெஸில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த 2 கட்டிடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து […]

இந்த வாரம் ஜப்பானின் வட பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, அதே பகுதியில் ஒரு வாரத்திற்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆமோரி (Aomori) அருகே, கடலடியில் 54 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் சேதமடைந்தன, 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டோக்கியோ வரை (550 கிமீ […]

ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இந்தப் புதிய, கடுமையான விதிகள் புதன்கிழமை (டிசம்பர் 10, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்தச் சீர்திருத்தம் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று […]

தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டினார். “நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். சுமார் 1.5 பில்லியன் மக்கள் அங்கு வசிக்கிறார்கள், அனைவரும் இந்தி பேசுவதில்லை, ஒருவேளை 500–600 மில்லியன் பேர் இந்தி பேசுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை […]