காணாமல் போன கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…..! பிறப்புறுப்புகளில் காயங்களுடன் சடலமாக மீட்பு சென்னையில் பயங்கரம்…..!

சென்னை சூளைமேட்டில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். இவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அந்த தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் கல்லூரிக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற மகள் மறுபடியும் மீண்டு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.


இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த தாய் அமைந்தகரை காவல் நிலையம் சென்று புகார் வழங்கியுள்ளார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு நடுவே மாதவரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் இளம் பெண்ணின் சடலம் இருப்பதாக மாதவரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்தில் சடலமாக மீட்கப்பட்டது சூளைமேட்டில் காணாமல் போன கல்லூரி மாணவிதான் என்பது தெரிய வந்தது. அதோடு அந்த பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சடலத்தின் அருகே சென்னை பெங்களூர் பயணச்சீட்டை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

Next Post

நீங்கள் அடிக்கடி கடையில் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா..? உங்களுக்காக தான் இந்த பதிவு..!!

Sun May 7 , 2023
இன்றைய காலக்கட்டத்தில் நாகரீகமும், தொழில்நுட்பமும் மாறி வருகிறது. நமது உணவு, உடை இருப்பிடம் என அனைத்திலுமே மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோர் வீட்டில் சமைக்கும் உணவை விட கடையில் சமைக்கும் உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த பதிவில், வீட்டில் செய்யக்கூடிய உணவை உற்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு ஆய்வின்படி, வீட்டில் சமைக்கும் பெரியவர்கள் அடிக்கடி வெளியே சாப்பிடுபவர்களை விட […]
நீங்கள் அடிக்கடி கடையில் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா..? உங்களுக்காக தான் இந்த பதிவு..!!

You May Like