தற்போது எல்லோரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. இந்த ஆண்ட்ராய்டு போன் மூலமாக பல நன்மைகளும் நடைபெறுகின்றன, பல தீமைகளும் நடைபெறுகின்றன.
ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன் வந்ததற்கு பிறகு சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. whatsapp, facebook, twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை.
ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் இது போன்ற சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவதை யாராலும் தடை செய்ய முடியாது. ஆனால் பெண்கள் இந்த சமூக வலைதள பயன்பாட்டில் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது.
சுய கட்டுப்பாடு என்பதை விடவும், சுயகட்டுப்பாட்டுடன் கூடிய எச்சரிக்கையுடன் இருப்பது மிக, மிக முக்கியம் என்று பல நேரங்களில், பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
அந்த வகையில், சென்னை வடபழனியை சேர்ந்த ஒரு பெண்மணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கினார். அந்த புகார்வில் தன்னுடைய செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து ஆபாசமாக பேசுவதாகவும் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாசமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி முறை தவறிய உறவுக்கு அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தசூழ்நிலையில்தான் செல்போன் whatsapp மூலமாக ஆபாச தகவல்கள் அனுப்பிய சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற மணி(37). அதோடு அவருக்கு இந்த விவகாரத்தில், துணையாக இருந்த தியாகராய நகரை சேர்ந்த மதி என்கின்ற மதியழகன்(35) உள்ளிட்ட 2️ பேரை கைது செய்தனர் இவர்களிடமிருந்து 2️கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதியழகன் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் இருக்கின்ற விதவை பெண்களின் விவரங்கள் மற்றும் செல்போன் விவரங்களை எடுத்து இருவரும் whatsapp மூலமாக அந்த பெண்களுக்கு ஆபாசமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி ஆபாசமாக பேசி, முறை தவறிய உறவுக்கு அழைப்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.