சோகம்..! கரூர் விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேர் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி…!

karur mk Stalin 2025

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.


கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தடைந்தார். நேரடியாக பிணவறைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அனைவரையும் சந்தித்து நலம்விசாரித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, சிவசங்கர், பெரியகருப்பன், சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் இருந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பணியில் இருக்கும் மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். நள்ளிரவு தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக அறிவித்தார்.

அதேபோல சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விசாரணைக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Vignesh

Next Post

தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீச்சு... கரூரில் கொந்தளிக்கும் மக்கள்...!!

Sun Sep 28 , 2025
விஜய் கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து நபர்கள் அவர் மீது செருப்பு தூக்கி வீசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் […]
vijay slipper 2025

You May Like